தரிசு நிலமாய் இருந்த தமிழ்பூமியை வளப்படுத்தியஅறிவு நதியே!
கரையைத்தேடும் அலைகளாக உன்னை தேடுகிறோம்
காந்தி சாலையில் நடப்பவர்கள் எல்லாம்
காந்திய வழியில் நடப்பவர்கள்அல்ல
உன் பெயரைச்சொல்லி சிலர்
இங்கே அரசியலில் அறுவடைசெய்து கொண்டு இருக்கிறார்கள்
துச்சாதனனா திரௌபதிக்குச்சேலை தரமுடியும்?
புலியா புள்ளிமான் குட்டிக்குப்பால் கொடுக்க முடியும்?
தமிழகத்தின் முற்பாதி நீ படைத்தாய்!
பிற்பாதி என் தம்பி படைப்பான் என்றாய்!!!
இங்கே வரலாறை கொள்ளும் காலம் துளிர்கின்றது!
நின் புகழ் பாட
ஆதவன் உதிக்கும் காலம் தொலைவிலில்லை
சூரியன் சுடரை காரிருள் தான் மறைக்குமோ?
சூரியன் உதிக்கும் காலத்தில் செறுக்குற்ற
இலைகள் உதிரும்!
சூரியன் உதிக்கும்!
உம் பிறந்தநாளில் இதை சூளுரைப்போம்!!!
அண்ணா வாழி!!!
No comments:
Post a Comment